சிரியாவில் பயங்கரவாதம் நிறுத்தப்பட்டு அமைதி இடம்பெற இரவும் பகலும் செபம்
ஆக.,30,2013. சிரியாவில் பயங்கரவாதம் நிறுத்தப்பட்டு அமைதி இடம்பெற இரவும் பகலும் திருநற்கருணை
ஆராதனை செபம் நடைபெற்று வருகின்றது. சிரியாவின் தமாஸ்கு மற்றும் ஹோம்ஸ் நகரங்களுக்கு
இடையேயுள்ள Qarahவிலுள்ள புனித ஜேம்ஸ் இல்லத்தில் இரவும் பகலும் திருநற்கருணை ஆராதனை
செபம் நடைபெற்று வருகின்றது. 8 நாடுகளைச் சேர்ந்த 20 ஆண் மற்றும் பெண் துறவிகளைக்
கொண்ட புனித ஜேம்ஸ் கிறிஸ்தவ ஒன்றிப்பு இல்லத்தில் சிரியாவில் அமைதி நிலவ இடைவிடாமல்
செபம் நடைபெற்று வருகின்றது. இச்செபம் பற்றிக் கூறிய இவ்வில்லத்தின் அருள்பணியாளர்
Daniel Maes, ஆபத்து, நிச்சயமற்ற எதிர்காலம், சண்டை, பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிரான
சக்திமிக்க ஆயுதம் செபமும், திருநற்கருணை ஆராதனையுமே என்று தெரிவித்தார்.