2013-08-29 15:30:59

திருத்தந்தை பிரான்சிஸ் : கொரிய மறைசாட்சிகள் நற்செய்தி அறிவிப்புப்பணிக்குத் தூண்டுகோல்கள்


ஆக.,29,2013. தென் கொரியாவின் செயோல் உயர்மறைமாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் கொலைசெய்யப்பட்ட இடங்களுக்குத் திருப்பயணம் மேற்கொள்வது, அந்நாட்டில் நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு உடனடியாக ஈடுபடுவதற்குத் தூண்டுகோலாய் இருக்கின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
செயோல் உயர்மறைமாவட்டம், இவ்வாண்டு செப்டம்பரை ‘மறைசாட்சிகளின் மாதமாக’ அறிவித்துச் சிறப்பிக்கவிருப்பதையொட்டி செயோல் பேராயர் Andrew Yeom Soo-jung அவர்களுக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
இத்திருப்பயணத்தில் பங்குகொள்ளும் அனைவரும் செபம் மற்றும் மறைசாட்சிகளின் எடுத்துக்காட்டான வாழ்வால் தூண்டப்பட்டு, இயேசு கிறிஸ்துவுடன் தங்களுக்குள்ள உறவில் ஆழப்படுவார்களாக என வாழ்த்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே இச்செய்தியை செயோல் உயர்மறைமாவட்டத்திற்கு அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.