2013-08-29 15:32:52

சிரியாவுக்காகச் செபிக்க அழைப்பு, கர்தினால் Sandri


ஆக.,29,2013., எகிப்து, ஈராக் மற்றும் பிற பகுதிகளின் காயப்பட்ட சூழல்களால் ஏற்கனவே அதிகம் பாதிப்படைந்துள்ள மத்திய கிழக்குப் பகுதியின் நிலையை, சிரியாவின் தற்போதைய கலக்கமானநிலை மேலும் மோசமடையச் செய்துள்ளது என்று திருப்பீட கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் Leonardo Sandri கவலை தெரிவித்துள்ளார்.
சிரியாவின் தற்போதைய நிலை குறித்து L'Osservatore Romano வத்திக்கான் நாளிதழில் எழுதியுள்ள கர்தினால் Sandri, ஆயுதங்களின் உரத்த ஒலியைவிட ஒப்புரவுக்கான ஒலி மிகுந்த வல்லமை மிக்கது என்று கூறியுள்ளார்.
சிரியாவில் வன்முறைகள் ஒழிந்து உரையாடல் தொடங்கப்படுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து விடுத்துவரும் அழைப்பையும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Sandri.
மேலும், சிரியாவுக்கெதிரான அமெரிக்க ஐக்கிய நாட்டு அல்லது NATO படைகளின் இராணுவத் தலையீடு சிரியாவின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது என்று, 1976ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற Mairead Maguire கூறியுள்ளார்.
ஆயிரக்கணக்கான சிரியா மக்கள் இறப்பதற்கும், புலம்பெயர்வதற்கும், மத்திய கிழக்குப் பகுதி முழுவதின் உறுதியான தன்மை பாதிக்கப்படவும் இது காரணமாக அமையும் என Maguire எச்சரித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.