2013-08-28 15:35:19

யூதர்களும், கிறிஸ்தவர்களும் இணைந்து செயலாற்றுவதே தங்கள் நம்பிக்கை - எருசலேம் முதுபெரும் தந்தை Fouad Twal


ஆக.28,2013. யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே உரையாடலை ஆழப்படுத்தி, இருவரும் இணைந்து செயலாற்றுவதே தங்கள் நம்பிக்கை என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் கூறியுள்ளார்.
கடந்த மாதம் 24ம் தேதியன்று இஸ்ரயேல் பெரும் தலைவர்கள் என்ற பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள David Lau Ashkenazi, Sephardic Yosef Yitzhaq ஆகிய இருவருக்கும், முதுபெரும் தந்தை Fouad Twal உட்பட பல கத்தோலிக்கத் தலைவர்கள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள இரு தனிப்பட்ட வாழ்த்து மடல்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 27ம் தேதி இச்செவ்வாயன்று, வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவில் வெளியான இம்மடல்களில், எருசலேம் முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர்கள் இருவரையும் விரைவில் சந்திக்கும் தன் ஆவலையும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.