முத்திப்பேறுபெற்ற அன்னை தெரசாவின் 103வது பிறந்த நாள்
ஆக.,27,2013. முத்திப்பேறுபெற்ற அன்னை தெரசாவின் 103வது பிறந்த நாள் இத்திங்களன்று மிகச்
சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்னை தெரசா ஆரம்பித்த பிறரன்பு மறைபோதகச் சபையின் கொல்கத்தா
தலைமையில்லத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா
பானர்ஜி உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் நன்றி கூறிய அச்சபையின்
தலைமைச் சகோதரி பிரேமா, இறந்துகொண்டிருப்போர், ஏழைகள் மற்றும் துன்புறுவோருக்கு அன்னை
தெரசா காட்டிய அன்பு எக்காலமும் நினைவுகூரப்படும் என்று கூறினார். மேலும், அமைதி,
சகோதரத்துவம், மனித சமுதாயத்துக்குத் தொண்டு ஆகியவற்றின் திருத்தூதராக, சிறப்பாக, ஒதுக்கப்பட்டோர்
மற்றும் ஏழைகளின் திருத்தூதராக அன்னை தெரசா விளங்கினார் என்று முதல்வர் மம்தா பானர்ஜி
இந்நிகழ்வில் பேசினார். 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி தற்போதைய மாசிடோனியக் குடியரசின்
Skopjeல் பிறந்த Agnes Gonxha Bojaxhiu, துறவு சபையில் தெரேசா என்ற பெயரை ஏற்று 1929ம்
ஆண்டிலிருந்து 68 ஆண்டுகள் கொல்கத்தாவில் பணியாற்றியுள்ளார் அன்னை தெரசா. 1979ம் ஆண்டில்
அமைதி நொபெல் விருதுபெற்ற அன்னை தெரசா, 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி காலமானார்.