2013-08-27 16:03:37

உணவுப் பாதுகாப்பு மசோதா மூலம் 82 கோடி மக்கள் பயன்பெறுவர்


ஆக.,27,2013. இந்தியாவில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு மசோதா, இத்திங்களன்று லோக்சபாவில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இத்திட்டத்தின்படி, 82 கோடி மக்களுக்கு, ஒரு ரூபாயிலிருந்து, மூன்று ரூபாய் வரையிலான விலையில், மாதம்தோறும், 5 கிலோ உணவுப் பொருட்கள் கிடைக்கும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, மத்திய அரசுக்கு ஒரு கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவாகும். கிராமப்புறங்களிலுள்ள 75 விழுக்காட்டு மக்களும், நகர்ப்புறங்களில் உள்ள, 50 விழுக்காட்டு மக்களும் இதனால் பயன்பெறுவர்.
பொது வினியோக முறைமூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு, 6 கோடியே 20 இலட்சம் டன் உணவுத்தானியம் தேவைப்படும்.
யார் இந்த மலிவு விலைத் தானியத்துக்குத் தகுதி உடையவர்கள் என்பதை மத்திய அரசின் வரையறைகளுக்கு ஏற்ப மாநில அரசு அடையாளம் காணும்.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.