2013-08-26 16:37:26

மத உரிமை மீறல்களில் ஈடுபடும் சவுதி அரேபியாவை கண்டிக்க அழைப்பு


ஆக.26,2013. மத உரிமை மீறல்களில் ஈடுபட்டுவரும் சவுதி அரேபிய அரசை கண்டிக்க அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு முன்வரவேண்டும் என உலக எவாஞ்செலிக்கல் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
மக்களின் மத உரிமைகளை மீறும் அரசுகளின் மீது பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதித்துவரும் அமெரிக்க ஐக்கிய நாடு, சவுதி அரேபியாவைப் பொறுத்தவரையில் மௌனம் காப்பதாக எவாஞ்செலிக்கல் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
மதச்சுதந்திரம் தொடர்பாக தொடர்ந்து மக்கள் சிறைத்தண்டனைகளையும் கசையடிகளையும் பெற்றுவருவதாகக் கூறும் இக்கூட்டமைப்பு, அண்மையில் 46 பெண்கள் உட்பட 53 எத்தியோப்பிய கிறிஸ்தவர்கள் சவுதி காவல்துறையால் மத காரணங்களுக்காக கைதுச்செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறது.
சவுதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுள் 15 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவர்கள். இவர்கள் தங்கள் வீட்டுக்குள் மட்டுமே வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சவுதி அரேபியாவில் கிறிஸ்தவ கோவில்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AP








All the contents on this site are copyrighted ©.