ஆக.26,2013. நாட்டின் பல பகுதிகளிலும், இரயில்வே தண்டவாளங்களை சட்ட விரோதமாக கடப்பதால்,
தினமும், 39 பேர் பலியாகின்றனர் என்ற தகவலை இந்திய இரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மக்களின்
வசதிக்காகவும், விபத்துகளை தடுக்கவும், இரயில்நிலையங்களிலும், சாலைகளில் தண்டவாளங்கள்
குறுக்கிடும் இடங்களிலும், பாலங்கள் மற்றும் இரயில்வே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளபோதிலும்,
இரயில்வே தண்டவாளங்களை, சட்ட விரோதமாக கடப்பதால், 2009 முதல் 2012 வரையான மூன்று ஆண்டுகளில்,
50 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். ஆண்டுக்கு சராசரியாக, 14 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி
உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.