ஆக.26,2013. இந்திய உணவு பாதுகாப்பு சட்டவரைவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டிவரும்
வேளையில், கடந்த 3 ஆண்டுகளில் ஏறத்தாழ 17,546 டன் உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டுள்ள
விபரம் தெரிய வந்துள்ளது. இந்திய உணவுக் கழக சேமிப்புக் கிடங்குகளில் இருந்து, 2012ம்
ஆண்டு, ஜூலை வரையான மூன்றாண்டுகளில் இந்த உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டிருப்பது தகவல்
அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும்
ஏறத்தாழ 44,000 கோடி ரூபாய் மதிப்பிலான பழங்கள், தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகள்
வீணடிக்கப்படுவதாக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத் பவார்
தெரிவித்துள்ளது குறிப்பித்தக்கது.