2013-08-22 15:52:40

பல ஆண்டுகளுக்குப்பின் முகநூலின் வழி இணைந்த சகோதரிகள்


ஆக.22,2013. பிரான்ஸ் நாட்டில் பெண் ஒருவர் 44 வருடங்களுக்கு முன்பு பிரிந்துபோன தன்னுடைய சகோதரி ஒருவரை, ‘பேஸ்புக்’ என்றழைக்கப்படும் முகநூலின் உதவியால் கண்டுபிடித்துள்ளார்.
பிரான்சில் உள்ள Douai என்னும் இடத்தில் வாழும் Muriel Vanderveken என்ற 66 வயது நிறைந்த பெண்ணுக்கு Liliane, Dorothée என்ற இரு சகோதரிகள் உள்ளனர்.
சிறு வயதில் தன்னுடைய குடும்பத்தை விட்டு பிரிந்த Muriel, பல ஆண்டுகளுக்கு பின்பு தன்னுடைய குடும்பத்தினரை தேடும் முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் அவை தோல்வியிலேயே முடிந்துள்ளன.
இந்நிலையில், 66 வயதான Muriel, புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். எனவே, தான் இறப்பதற்குள் தன்னுடைய சகோதரிகளை சந்தித்து விடவேண்டும் என்று நினைத்த இவர், முகநூலின் மூலம் தனது சகோதரிகளைத் தேட ஆரம்பித்தார்.
தற்போது அவருடைய சகோதரிகளில் ஒருவரான Dorothée என்பவரை கண்டுபிடித்துள்ளார் Muriel. தன்னுடைய மற்றொரு தங்கை Lilianeஐத் தேடிக் கொண்டிருப்பதாகவும், ஆனால் அவர் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது தனக்கு வருத்தமளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

ஆதாரம் : TamilWin








All the contents on this site are copyrighted ©.