ஆக.,22,2013. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில், 12வது உலகத்தமிழ் இணைய மாநாடு இம்மாதம்
15 முதல் 18 வரை கோலாகலமாக நடைபெற்றது. இம்மாநாட்டில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன், உட்பட 650க்கும் மேலான தமிழ் அறிஞர்கள் பல நாடுகளிலிருந்து
கலந்து கொண்டனர். மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமது
ஷபெரிசீக் துவக்கவுரையாற்றினார். இம்மாநாடு குறித்து வத்திக்கான் வானொலியில் தொலைபேசி
நேர்காணலில் கலந்து கொள்கிறார் திரு.முகிலன் முருகன். இவர் இம்மாநாட்டின் செயல்குழு உறுப்பினராவார்.