Croatiaவில் Milanஅரசக் கட்டளை வெளியிடப்பட்டதன் 1700வது
ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள்
ஆக.21,2013. கிறிஸ்துவின் சிலுவையை ஏறெடுத்து நோக்குவதாலும், சிலுவையில் அறையுண்ட இயேசுவுடன்
தொடர்பு கொள்வதாலும் உலகையும், வாழ்வையும் புதிய கண்ணோட்டத்துடன் காண முடியும் என்று
Zagreb பேராயர் கர்தினால் Josip Bozanić கூறினார். பேரரசர் Constantine அவர்களின்
தாய் புனித Helena அவர்களின் தூண்டுதலால், 313ம் ஆண்டு மதச் சுதந்திரத்தை அறிவித்த Milan
அரசக் கட்டளை வெளியிடப்பட்டதன் 1700வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள், Croatia வின் தலைநகரான
Zagrebல் புனித Helena அவர்களின் திருநாளான ஆகஸ்ட் 18ம் தேதி சிறப்பிக்கப்பட்டது. இவ்விழாவையொட்டி
நடைபெற்ற திருப்பலியின்போது, Croatia ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Bozanić அவர்கள்
வழங்கிய மறையுரையில், கிறிஸ்தவ வாழ்வில் சிலுவை அடையாளம் ஆற்றும் மாற்றங்கள் குறித்து
பேசினார். மதச்சுதந்திரம் குறித்து, 1700 ஆண்டுகளுக்கு முன் விடுக்கப்பட்ட Milan அரசக்
கட்டளை, கிறிஸ்துவ சமுதாயத்திற்கு மட்டுமல்ல, மனித சமுதாயத்திற்கே நல்ல விளைவுகளை உருவாக்கியுள்ளது
என்று கர்தினால் Bozanić அவர்கள் குறிப்பிட்டார். பேரரசர் Constantine காலத்திய விளக்கு
என்று கருதப்படும் ஓர் எண்ணெய் விளக்கை, கர்தினால் Bozanić அவர்கள், திருப்பலியின் இறுதியில்,
Milan தலத் திருஅவைக்கு, பரிசாக வழங்கினார்.