ஹங்கேரியில் ஆகஸ்ட் 22-24 வரை அனைத்துலக விவிலியக் கருத்தரங்கு
ஆக.,20,2013. ஹங்கேரி நாட்டின் Szeged நகரில் இம்மாதம் 22 முதல் 24 வரை அனைத்துலக விவிலியக்
கருத்தரங்கு நடைபெறவுள்ளது. பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள இந்த விவிலியக்
கருத்தரங்கு, தொடக்ககாலக் கிறிஸ்தவ இலக்கியத்திலும், விவிலிய நூல்களிலும் செல்வந்தர்
மற்றும் ஏழைகள் குறித்துச் சொல்லப்பட்டிருப்பவைகள் குறித்து கவனம் செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
நம்பிக்கை ஆண்டில், Szeged நகரில் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கு 25வது அனைத்துலக விவிலியக்
கருத்தரங்கு ஆகும்.