2013-08-19 16:00:09

திருத்தந்தை பிரான்சிஸ் : பகுதி நேர கிறிஸ்தவர்களாக நாம் இருக்கமுடியாது


ஆக.19,2013. “பகுதி நேர கிறிஸ்தவர்களாக நாம் இருக்கமுடியாது. கிறிஸ்து நம் வாழ்வின் மையமாக இருந்தால், நாம் ஆற்றும் அனைத்துச் செயல்களிலும் அவர் பிரசன்னமாயிருப்பார்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இத்திங்கள்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், இஸ்பானியம், ஜெர்மானியம், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், போலந்து, அரபு ஆகிய ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் டுவிட்டரில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் டுவிட்டரில், கிறிஸ்துவை நம் வாழ்வின் மையமாக்க் கொண்டிருக்கவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.