அர்ஜென்டினா மறைபரப்புப் பணியாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு திருத்தத்தையின்
செய்தி
ஆக.19,2013. மறைப்பணியாளர்கள் தங்களையே துறந்து இயேசுவை அறிவிக்கவும், அவரது நற்செய்தியை
எல்லா இடங்களிலும் வெளிபடுத்தவும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். அர்ஜென்டினாவின்
San Fernando del Valle de Catamarca என்ற இடத்தில் துவங்கிய, மறைபரப்பு பணியாளர்களின்
நான்காவது தேசிய மாநாட்டிற்கு, திருத்தத்தை அவர்கள் அனுப்பியுள்ளச் செய்தியில், மறைபரப்புப்
பணியாளர்கள் செய்கின்ற பணிக்கும், அவர்கள் காட்டுகின்ற ஆர்வத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளதோடு,
இந்த மாநாடு மறைபரப்புப் பணியில் மென்மேலும் வளர உதவியாக இருக்கட்டும் என்றும் கூறியுள்ளார்.
அர்ஜென்டினா நாட்டு ஆயர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஆயிரத்திற்கும் அதிகமான
மறைப்பணியாளர்களும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயர்களும் கலந்துக்கொண்ட இம்மாநாட்டிற்கு
Catamarca மறைமாவட்ட ஆயர் Luis Urbanc தலைமைதாங்கி வழிநடத்தினார். 'மறைத்தூது அர்ஜென்டினா,
உன் நம்பிக்கையை பகிர்ந்துகொள்' என்பது இம்மாநாட்டின் தலைப்பாக எடுக்கப்பட்டிருந்தது.