திருத்தந்தை பிரான்சிஸ் : அர்ஜென்டீனாவின் ஏழை மறைமாவட்டங்களுக்கு ஒரு இலட்சம் யூரோக்கள்
நன்கொடை
ஆக.,16,2013. வருகிற செப்டம்பர் 8ம் தேதியன்று அர்ஜென்டீனா நாட்டில் தேசிய அளவில் இடம்பெறும்
நிதி சேகரிப்பில் அனைத்து மக்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். தனது நாட்டு மக்களை நன்கொடை வழங்க ஊக்கப்படுத்தியிருப்பதோடு, தனது பங்காக
அந்நாட்டின் தேவையில் இருக்கும் ஏழை மறைமாவட்டங்களுக்கு ஒரு இலட்சம் யூரோக்களை நன்கொடையாகவும்
வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இயற்கைப் பேரிடர்கள், பசி மற்றும் பிற துன்பங்களால்
பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தையர் வழங்குவதற்கென அளிக்கப்படும் இராயப்பர் காசு
என்ற நன்கொடைப் பணத்திலிருந்து அர்ஜென்டீனாவில் ஏழை மறைமாவட்டங்களுக்கு உதவியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ்.