2013-08-16 15:23:19

எகிப்தில் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுமாறு ஐ.நா. வலியுறுத்தல்


ஆக.,16,2013. மேலும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் அவைத் தலைவரும், எகிப்தில் வன்முறைகள் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.
எகிப்தில் இடம்பெற்ற உயிரிழப்புகள் வேதனை தருவதாகவும், எகிப்தின் அதிகாரிகளும் பாதுகாப்புப் படையினரும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறும் கேட்டுள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தலைவர் நவிபிள்ளை.
எகிப்துக்குத் தேவையானது ஒப்புரவே என்றுரைத்துள்ள நவிபிள்ளை, அந்நாட்டின் அனைத்துத் தரப்பினரும் வன்முறையையும், வெறுப்பான பேச்சுக்களையும் நிறுத்தி உரையாடலில் ஈடுபடுமாறு கேட்டுள்ளார்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.