2013-08-13 15:55:56

திருத்தந்தை பிரான்சிஸ் குறித்து சீன ஊடகத்தில் நல்ல அறிக்கை, ஹாங்காங் கர்தினால்


ஆக.,13,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கடந்த நான்கு மாதத் தலைமைப்பணியை வைத்து அவர் குறித்த நேர்மையான மற்றும் அறிவுக்கு உகந்த தெளிவான செய்திகளை, சீன ஊடகம் வெளியிட்டிருப்பது ஓர் அசாதாரணச் செயல் என்று ஹாங்காங் கர்தினால் ஜான் டாங் ஹான் (John Tong Hon) கூறியுள்ளார்.
சீன ஊடகத்தின் புதிய திருத்தந்தை குறித்த செய்திகள் நடுநிலையானவை, முக்கியத்துவம் பெற்றவை மற்றும் இவை புதிய திருத்தந்தை குறித்து குறைவாக எழுதியதில்லை என்றும் ஹாங்காங் ஆயர் கர்தினால் டாங் கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீனக் கத்தோலிக்கர் குறித்து நல்ல எண்ணத்தை உருவாக்கியுள்ளார் என்றும், இத்தகைய நல்ல திருத்தந்தையை கர்தினால்கள் தேர்ந்தெடுத்திருப்பதற்கு, சீனக் கத்தோலிக்கர் நன்றி தெரிவித்தனர் என்றும் கூறியுள்ளார் கர்தினால் டாங்.
தற்போதைய சீன-வத்திக்கான் உறவுகளில் இக்கட்டானநிலை இருந்தாலும், வருங்காலத்தில் இவ்வுறவு மேம்படும் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார் ஹாங்காங் கர்தினால் டாங்.

ஆதாரம் : UCAN







All the contents on this site are copyrighted ©.