ஆக.,12,2013. திருத்தந்தைக்கு விசுவாசமாக இருப்பதால் மறைந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள
சீனாவின் அருள்பணியாளர் ஒருவர், அந்நாட்டின் வட மாநிலமான Hebeiயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலை 4 மணிக்கு வாகனம் ஓட்டிச் சென்றுகொண்டிருந்தபோது, 10 காவல்துறை அதிகாரிகளால்
நிறுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்ட அருள்பணி Song Wanjun, எங்கு எடுத்துச்செல்லப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார்
என்பதை காவல்துறை கூற மறுத்து வருகின்றது. 11 ஆண்டுகளுக்கு முன்னர் அருள்பணியாளராகத்
திருநிலைப்படுத்தப்பட்ட 39 வயதாகும் Wanjun, ஏற்கனவே ஒருமுறை தன் விசுவாசத்திற்காகக்
கைதுசெய்ய முற்பட்டபோது காவல்துறையிடம் சிக்காமல் தப்பிச்சென்றவர் ஆவார். திருத்தந்தைக்கு
விசுவாசமாக இருப்பதால் மறைந்து வாழும் கிறிஸ்தவர்கள், அரசு ஆதரவுபெற்று, அரசு அதிகாரத்தின்கீழ்
இயங்கும் கத்தோலிக்க சபையில் இணைய வேண்டும் என வலியுறுத்தி, கைதுகளையும் சித்ரவதைகளையும்
தொடர்ந்து நடத்தி வருகின்றது சீன அரசு.