கடவுளின் குழந்தைகளாகவும், ஒருவர் ஒருவருக்குச் சகோதர சகோதரிகளாகவும் இருப்பது கிறிஸ்தவ
அனுபவத்தின் மையம்
ஆக.,13,2013. கடவுளின் குழந்தைகளாகவும், ஒருவர் ஒருவருக்குச் சகோதர சகோதரிகளாகவும் இருப்பது
கிறிஸ்தவ அனுபவத்தின் மையம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாய்கிழமையன்று எழுதியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், இஸ்பானியம், ஜெர்மானியம்,
போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், போலந்து, அரபு ஆகிய ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும்
டுவிட்டரில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் கிறிஸ்தவ அனுபவத்தின் இதயமாக இருப்பது
குறித்து இச்செவ்வாயன்று எழுதியுள்ளார்.