பஞ்சாபின் துணை முதல்வர், ஜலந்தரின் புதிய ஆயர் சந்திப்பு
ஆக.,12,2013. பஞ்சாபின் துணை முதல்வர் Sukhbir Singh Badal, மரியாதை நிமித்தம் ஜலந்தரின்
புதிய ஆயரைச் சந்தித்து தன் வாழ்த்துக்களை வழங்கினார். ஜலந்தரின் ட்ரினிட்டி கல்லூரியில்
இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, பஞ்சாபில் கிறிஸ்தவர்களின் இன்றைய நிலைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தலித் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படவேண்டிய சலுகைகள் குறித்து மத்திய அரசிடம் பஞ்சாப்
மாநில அரசு எடுத்துரைக்க வேண்டும் என ஏற்கனவே மாநில அரசிடம் புதிய ஆயர் பிராங்கோ மூலக்கல்
விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜலந்தர் நகரில் மறைமாவட்டம் ஏற்பாடு
செய்திருந்த 'Sarv Dharam' செப வழிபாட்டிலும் கலந்துகொண்டார் துணை முதல்வர் Sukhbir Singh
Badal. செப வழிபாட்டிற்குப் பின்னர் துணைமுதல்வருக்கும் ஆயருக்கும் இடையேயான சந்திப்பு
இடம்பெற்றது.