குடியேற்றதாரர் வாரம் விசுவாசத்தையும் பிறரன்பையும் வெளிப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பு
ஆக.,10,2013. இம்மாதம் 11 முதல் 18 வரை 41வது தேசிய குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர்
வாரத்தைச் சிறப்பிக்கவுள்ளது OCPM என்ற போர்த்துக்கல் நாட்டின் தேசிய கத்தோலிக்க குடியேற்றதாரர்
கழகம். இஞ்ஞாயிறன்று தொடங்கும் இந்தக் குடியேற்றதாரர் வாரம், உலகெங்கும் வாழ்கின்ற
குடியேற்றதாரரையும், புலம்பெயர்ந்தோரையும் நினைத்துப் பார்ப்பதற்கு, போர்த்துக்கீசியருக்குச்
சிறப்பான தருணமாக உள்ளது என அக்கழகம் தெரிவித்தது. இவ்வாரத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக,
வருகிற திங்கள், செவ்வாய் தினங்களில் குடியேற்றதாரர்கள், பாத்திமா அன்னைத் திருத்தலத்துக்குத்
திருப்பயணம் மேற்கொள்வர் எனவும் அக்கழகம் கூறியது. இவ்வாரம் விசுவாசத்தையும் பிறரன்பையும்
வெளிப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது எனவும் கூறியது OCPM கழகம்.