திருத்தந்தை பிரான்சிஸ் : நாம் நமக்குள் அளவற்ற அரும்பொருள்களைச் சுமந்து செல்கிறோம்
ஆக.,09,2013. நாம் அனைவரும் உடையக்கூடிய மற்றும் வறிய, மண்கலங்கள், ஆயினும், நாம் நமக்குள்
அளவற்ற அரும்பொருள்களைச் சுமந்து செல்கிறோம் என்று தனது டுவிட்டரில் இவ்வெள்ளிக்கிழமையன்று
எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், அரபு உட்பட
ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் டுவிட்டரில் எழுதி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.