ஆக.,09,2013. இரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கத்தோலிக்கச் சமூகத்தின் சகோதரத்துவ அன்பும்
ஒருமைப்பாடும் நிறைந்த நல்வாழ்த்துக்களை அனைத்து முஸ்லீம்களுக்கும் தெரிவித்துள்ளார்
கோவா மற்றும் டாமன் பேராயர் Filipe Neri Ferrao. மதங்களுக்கிடையே நிலவும் ஒருமைப்பாட்டுணர்வு,
உண்மையான நீதியையும், எல்லா உறவுகளுக்கும் ஊற்றான கடவுளோடு நட்புறவில் வாழ்வதையும் ஊக்கப்படுத்தும்
என்று தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார் பேராயர் Ferrao. மேலும், இரம்ஜான்
பண்டிகையை முன்னிட்டு அனைத்து முஸ்லீம்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள நைஜீரிய
ஆயர்கள், இயற்கையைப் பாதுகாப்பதில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் மற்ற மதத்தவரும் ஒன்றிணைந்து
உழைக்குமாறு கேட்டுள்ளனர்.