மடு மாதா திருத்தலத்தின் திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
ஆக.,08,2013. வரலாற்று சிறப்புமிக்க மன்னார் மடுமாதா திருத்தலத்தின் இவ்வாண்டு திருவிழாவை
முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. மடு
மாதா திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நாடு முழுவதிலும்
இருந்து மடுவுக்கு செல்ல உள்ள நிலையில், இவர்களின் பாதுகாப்புக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட
காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன்,
சிறப்பு போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இம்மாதம் 15ம் தேதி நடைபெறும்
மடுமாதா திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வரும் பக்தர்களும், அவர்களை அழைத்து வரும் வாகன
ஓட்டுனர்களும், மது அருந்திவிட்டு, வாகனத்தை செலுத்தக் கூடாது, தேவைக்கு அதிகமான பயணிகளையோ,
பொருட்களையோ, வாகனங்களில் ஏற்றிச்செல்லக் கூடாது என்ற காவல்துறையின் நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க
வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.