2013-08-06 16:35:10

மியான்மாரில் மறைப்பணியாளர்கள் உணவுப் பாதுகாப்புத் திட்டம்


ஆக.06,2013. மியான்மாரின் Shan மாநிலத்தில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை வலுப்படுத்த ஐந்து செயல்திட்டங்களை வகுத்துள்ளனர் அம்மாநிலத்தில் பணியாற்றும் Scalabrini மறைப்பணியாளர்கள் மற்றும் கத்தோலிக்க ஆர்வலர்கள்.
வேளாண்மைப் பள்ளிகள், கிராம சேவைகள், பன்றி வளர்ப்புப் பயிற்சி, நீர்பாசனத் திட்டங்கள், குடிநீர் விநியோகம் ஆகிய ஐந்து திட்டங்களில் இவர்கள் கவனம் செலுத்தவுள்ளனர்.
புதிய சமுதாயம் (New Humanity) என்ற அமைப்பின் பணியாளர்கள், கானடாவைச் சேர்ந்த Scalabrini சபை அருள்பணியாளர்களுடன் இணைந்து இத்திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளனர்.
1992ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசு-சாரா மற்றும் ஆதாயமற்ற புதிய சமுதாயம் என்ற அமைப்பு, கம்போடியாவிலும் மியான்மாரிலும் கல்விக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், வேளாண்துறைக்கும் உதவிகளைச் செய்து வருகின்றது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.