ஆக.,05,2013. வன்முறையின் தூதர்களான பகைமையையும் கசப்புணர்வுகளையும் கைவிட்டு அமைதியை
இதயத்தில் தாங்கிச் செயல்படவேண்டும் என Zimbabwe மக்களுக்கு அழைப்புவிடுத்துள்ளனர் அந்நாட்டு
ஆயர்கள். Zimbabweயின் அண்மைத் தேர்தலில் அரசுத்தலைவர் இராபர்ட் முகாபேயின் கட்சி
வென்றுள்ளது என்ற அறிவிப்பையொட்டி எழுந்துள்ள பதட்டநிலைகளைக் களையும் நோக்கில் இந்த விண்ணப்பத்தை
விடுத்துள்ளனர் ஆயர்கள். ஜூலை மாதம் 31ம்தேதி இடம்பெற்ற தேர்தலைக் கண்காணித்தக் குழுவில்
Zimbabwe ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவையும் தெற்கு ஆப்ரிக்க ஆயர்கள் பேரவைகளின்
அமைப்பு ஒன்றும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது Zimbabwe தேர்தலில்
வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ள இராபர்ட் முகாபே, 1980ம் ஆண்டு முதல் 87 வரை அந்நாட்டின்
பிரதமராகவும், 1987 முதல் தற்போதுவரை அரசுத்தலைவராகவும் தொடர்ந்து பதவி வகித்துள்ளார்.