இந்தியா : Id-al-Fitr பண்டிகையை முன்னிட்டு 28 முஸ்லீம் கைதிகளுக்கு விடுதலை
ஆக.,03,2013. முஸ்லீம்களின் Id-al-Fitr பண்டிகையை முன்னிட்டு 22 பாகிஸ்தான் மற்றும் 6
பங்களாதேஷ் கைதிகளை விடுவித்துள்ளது இந்திய அரசு. இந்தியாவின் பல்வேறு சிறைகளிலிருந்து
விடுதலை செய்யப்பட்ட 22 பாகிஸ்தான் கைதிகள் அமிர்தசரசுக்கு கொண்டுவரப்பட்டு Attari எல்லையில்
பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டனர். 60 வயது மதிக்கத்தக்க இக்கைதிகளில் ஒருவரான Saddiq
Umar ஏறக்குறைய 20 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் பாகிஸ்தான் செல்கிறார். இவர் Times
of India செய்தியாளரிடம் கூறுகையில், தான் ஒரு மீனவர் என்றும், போதைப்பொருள் குற்றத்தில்
தான் எவ்வாறு கைது செய்யப்பட்டேன் என்பது புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.