எவரெஸ்ட் மலையில் ஏறுவோர்க்கான விதிமுறைகளில் கடும் கட்டுப்பாடுகள்
ஆக.,02,2013. எவரெஸ்ட் மலையில் ஏறுவோர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளில் கடும் கட்டுப்பாடுகளைக்
கொண்டுவருவதற்கு நேபாள அரசு திட்டமிட்டு வருகிறது. சுற்றப்புறச் சூழலைப் பாதுகாக்கவும்,
மலையேறும் குழுக்களுக்கு உதவவும், அவர்களைக் கண்காணிக்கவும், மீட்புப்பணியாளர்களுக்கு
ஒத்துழைப்பு வழங்கவும் திட்டமிட்டு வருகிறது நேபாள அரசு. எவரெஸ்ட் மலையில் ஏறுவோர்
அடுத்த ஆண்டிலிருந்து மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவார்கள் என்றும், நேபாள அரசின்
கண்காணிப்புக் குழு, முதன்முறையாக மலையின் அடிவாரத்தில் முகாமை அமைக்கும் என்றும் பிபிசி
செய்தி கூறுகின்றது. எவரெஸ்ட் மலையில் ஏறுவோர் விதிமுறைகளை மீறுவதால் இப்புதிய
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.