திருத்தந்தை பிரான்சிஸ் : உயர்வான இலட்சியங்களுக்காக, அனைத்தையும்
பணயம் வைப்பது சிறந்தது
ஜூலை,31,2013. "என் அன்பு நண்பர்களே, உயர்வான இலட்சியங்களுக்காக, அனைத்தையும் பணயம் வைப்பது
சிறந்தது. கிறிஸ்துவின் மீதும், அவரது நற்செய்தியின் மீதும் நமது வாழ்வைப் பணயம் வைப்பது
தகுதியானது" என்ற Twitter செய்தியை இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒன்பது
மொழிகளில் வெளியிட்டார். மேலும், ஜூலை 26, கடந்த வெள்ளிக்கிழமையன்று, ரியோ தெ ஜனெய்ரோ
நகர் வீதிகளில் நிகழ்ந்த ஒரு சம்பவம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், ரியோ நகரின் சாலைகளில் தன் திறந்த காரில் பயணித்தபோது, கூட்டத்தைக்
கட்டுப்படுத்திக் கொண்டிருந்த காவலர்களை மீறி, Nathan de Brito என்ற 10 வயது சிறுவன்
திருத்தந்தையிடம் ஓடிச்சென்று அவரை அணைத்தார். ஒரு சில நிமிடங்கள் நீடித்த இந்த நிகழ்வில்,
சிறுவன் Nathan திருத்தந்தையிடம் தான் கிறிஸ்துவுக்காக ஒரு குருவாக விழைவதாகத் தெரிவித்ததாகவும்,
திருத்தந்தை அவர்கள், கண் கலங்கியபடி, இன்று முதல் உன் அழைப்பு உறுதியாகிவிட்டது என்று
சொன்னதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.