2013-07-31 16:53:40

இங்கிலாந்து பேராயர் : திருத்தந்தை மக்களை அடைவதற்கு அனைத்து வழிகளிலும் முயன்றது தன்னை அதிகம் கவர்ந்தது


ஜூலை,31,2013. திருத்தந்தையிடம் விளங்கிய சக்தியும், அவர் மக்களை அடைவதற்கு அனைத்து வழிகளிலும் முயன்றதும் தன்னை அதிகம் கவர்ந்தன என்று இங்கிலாந்து பேராயர் ஒருவர் கூறினார்.
28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்ள ரியோ தெ ஜனெய்ரோ நகருக்குச் சென்றிருந்த Birmingham பேராயர் Bernard Longley அவர்கள், தன் அனுபவங்களை CNA கத்தோலிக்கச் செய்தியிடம் பகிர்ந்துகொண்டபோது இவ்வாறு கூறினார்.
கரங்களை நீட்டி அனைவரையும் அரவணைக்கும் உலக மீட்பரின் திரு உருவத்திற்குக் கீழ் நடைபெற்ற இந்த இளையோர் விழாவில், மற்றொரு மேய்ப்பரும் மக்களை அரவணைக்க எப்போதும் காத்திருந்தார் என்ற உணர்வை திருத்தந்தை இளையோரிடையே உருவாக்கினார் என்று பேராயர் Longley அவர்கள் கூறினார்.
புதிய வழி நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பீட அவையின் உறுப்பினரான பேராயர் Longley அவர்கள், திருத்தந்தையின் நேரடியான, தெளிவான, எளிய கருத்துக்களைக் கேட்க இளையோர் ஆவலாக இருந்ததைப் போலவே, ஆயர்கள் பலர் வழங்கிய மறைகல்வி அமர்வுகளிலும் இளையோர் ஆர்வம் கொண்டிருந்ததைக் காண முடிந்தது என்று கூறினார்.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.