2013-07-30 16:00:09

திருத்தந்தை பிரான்சிஸ் : உலக இளையோர் தின அனுபவத்தைத் தொடர்ந்து வாழுமாறு இளையோர்க்கு அழைப்பு


ஜூலை,30,2013. இளையோர் நண்பர்களே, உலக இளையோர் தினத்தில் ஒன்றிணைந்து நாம் அறிக்கையிட்டதை இப்போது தினம்தோறும் தொடர்ந்து வாழ வேண்டும் என்று இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், “ரியோவில் விவரிக்க முடியாத சிறந்த அனுபவம் பெற்றேன். ஒவ்வொருவருக்கும் நன்றி, எனக்காகச் செபியுங்கள்” என்று இத்திங்களன்று தனது டுவிட்டர் பக்கத்தில் மற்றொரு செய்தியையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரேசில் நாட்டுக்கான தனது ஒரு வாரத் திருப்பயணத்தை நிறைவுசெய்து இத்திங்கள் நண்பகல் வேளையில் வத்திக்கான் திரும்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், தினமும் ஒன்பது மொழிகளில் தனது டுவிட்டரில் எழுதி வருகிறார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரேசில் நாட்டுக்கானத் திருப்பயணம் அவரின் முதல் வெளிநாட்டுத் திருப்பயணமாக அமைந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.