2013-07-29 16:33:31

வளர்ச்சித் திட்டங்களில் பணிபுரியஇந்தியகாரித்தாஸ் அமைப்பின் சுயவிருப்பப் பணியாளர் குழு


ஜூலை,29,2013. உதவி தேவைப்படும் காலங்களில் சுயவிருப்பப் பணியாளர்களின் சேவையைப் பயன்படுத்தும் நோக்கில் குழு ஒன்றை, இந்தியகாரித்தாஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது
இத்தகைய குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது, இதுவே முதன் முறை என்றார் அந்நிறுவனத்தின் உயர் இயக்குனரான அருள்பணியாளர் Frederick D'Souza.
உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கின்போது 300க்கும் மேற்பட்ட சுயவிருப்பப் பணியாளர்கள் இந்தியக் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்போடு இணைந்து பணியாற்றியது, இத்தகைய ஒரு குழுவை உருவாக்க காரணமாக இருந்தது என்றார் அருள்பணியாளர் D'Souza.
இந்தியக் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில், இயற்கைப் பேரிடர்களின்போது சுயவிருப்பப் பணியாளர்கள் முன்வந்து உழைப்பது வழக்கமே எனினும், வளர்ச்சித்திட்டங்களுக்கென சுயவிருப்பப் பணியாளர்கள் குழு ஒன்றை அதிகாரப்பூர்வமாக உருவாக்கியுள்ளது தற்போதுதான் என்றார் அருள்பணியாளர் D'Souza.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.