ஜூலை,29,2013. 'நான் திரும்பி வந்துள்ளேன், இப்பயணத்தினால் ஏற்பட்ட களைப்பைவிட, இப்பயணம்
தந்த மகிழ்வு அதிகமாக உள்ளது என உறுதி கூறுகிறேன்' என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று
எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். பிரேசில் நாட்டில் தன் திருப்பயணத்தை முடித்துக்கொண்டு
இத்திங்கள் காலை இத்தாலிய நேரம் 11.25 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் 3 மணிக்கு
உரோம் நகர் திரும்பியபின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில்
இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மேலும், இஞ்ஞாயிறன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், 'அன்புநிறை
இளையோரே! கிறிஸ்துவின் உண்மையான விளையாட்டு வீரர்களாக இருங்கள். அவரின் குழுவில் விளையாடுங்கள்'
எனவும், மற்றொரு டுவிட்டர் செய்தியில், 'இயேசுவின் உணர்வுகளையும் எண்ணங்களையும் பகிர்ந்து
கொள்ளும்பொருட்டு அவரின் வாழ்வில் நமது வாழ்வை அமைக்க வேண்டும்' என்றும் எழுதியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ்.