2013-07-29 16:33:53

குஜராத்தின் நகர்களில் ஆண்குழந்தைகளைவிட பெண்குழந்தைகளின் மரணம் அதிகம்


ஜூலை,29,2013. குஜராத்தின் நகர்களில் கடந்த மூன்றாண்டுகளில் ஒரு வயதிற்குட்பட்ட 12,325 பெண்குழந்தைகளும் 8,706 ஆண்குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக அம்மாநிலத்தில் பணிபுரியும் இயேசுசபையினரின் மனித உரிமைகள் மையம் தெரிவிக்கிறது.
இதே காலகட்டத்தில் குஜராத்தின் கிராமப்புறங்களில் ஒரு வயதிற்குட்பட்ட 2,739 ஆண்குழந்தைகளும் 2,246 பெண்குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப்புறங்களில் பெண்குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பதற்கு, மக்களின் ஆணாதிக்க மனப்பான்மையும், ஆண்குழந்தைகளையே விரும்பும் மனநிலையுமே காரணங்கள் என்றார் இயேசு சபையின் நீதி, அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான Prashant அமைப்பின் தலைவர் அருள்பணியாளர் Cedric Prakash.

ஆதாரம் : Asia News








All the contents on this site are copyrighted ©.