2013-07-27 16:12:33

நீதி மற்றும் அமதிக்கானப் போராட்டத்தில் ஒன்றிணைய ஹாங்காங் தலத்திருஅவை அழைப்பு


ஜூலை,27,2013. ஹாங்காங்கில் சீனஅரசு மேற்கொண்டுவரும் பிரித்தாளும் முயற்சியை புரிந்துகொண்டு, நீதி மற்றும் அமைதிக்கான தேடுதலில் அப்பகுதியின் அனைத்து மதநம்பிக்கையாளர்களும் ஒன்றிணைந்துச் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது ஹாங்காங் தலத்திரு அவை.
உண்மையான மக்களாட்சி குறித்து பொதுமக்களுடன் ஆலோசனை நடத்தாமல் எடுக்கப்படும் முடிவுகளால், மக்களின் கோபம் அரசுக்கு எதிராகத் திரும்பி, போராட்டங்கள் இடம்பெறக்கூடும் என்ற அச்சத்தையும் வெளியிட்டுள்ளது ஹாங்காங் மறைமாவட்டம்.
மக்களாட்சி குறித்த நேர்மையான கலந்துரையாடலுக்கு தலத்திருஅவை அழைப்பு விடுத்ததை பெரும்பாலான சமூகத்தொடர்பு சாதனங்கள் வரவேற்றுள்ளபோதிலும், அரசு அது குறித்து அக்கறையின்றி செயல்படுவதாக ஹாங்காங் மறைமாவட்டம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.