அமைதி தேர்தல் குறித்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் ஜிம்பாப்வே பேராயர்
ஜூலை,27,2013. ஜிம்பாப்வே நாட்டில் புதனன்று இடம்பெறஉள்ளதேர்தல் குறித்தவிவாதங்களும்,
ஊர்வலங்களும், பிரச்சாரங்களும் நன்முறையில் இடம்பெற்றுவருவது நம்பிக்கைகளை தருவதாகஉள்ளது
எனஅறிவித்தார் அந்நாட்டு பேராயர் Alexander Thomas Kaliyanil. 2008ம் ஆண்டில் தேர்தலுக்கு
முன்னர் இடம்பெற்றவன்முறைகள் போல் அல்லாமல் தற்போது எல்லாம் அமைதியானமுறையில் இடம்பெற்று
வருவது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டBulawayo பேராயர், யார் தேர்தலில் வெல்வார் என்பது
கணிக்க முடியாததாக இருக்கின்ற போதிலும், எக்கட்சிக்கும் பெரும்பானன்மை இல்லாதநிலை ஏற்படும்போது,
வன்முறைகள் உருவாகும் ஆபத்து உள்ளது என்றஅச்சத்தை வெளியிட்டார்.