2013-07-26 15:39:16

சம்பல்பூர் மறைமாவட்டத்துக்குப் புதிய ஆயர்


ஜூலை,26,2013. இந்தியாவின் Sambalpur, Rourkela,மற்றும் Diphu மறைமாவட்டங்களுக்கு புதிய ஆயர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Sambalpur மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த இறைவார்த்தை சபை ஆயர் Lukas Kerketta அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், அம்மறைமாவட்டத்தின் புதிய ஆயராக Cuttack-Bhubaneswar உயர் மறைமாவட்ட குரு நிரஞ்சன் சுவால் சிங்கை நியமித்துள்ளார்.
ஒரிசாவின் கொட்டமா எனுமிடத்தில் 1961ம் ஆண்டு பிறந்த புதிய ஆயர் நிரஞ்சன், உரோம் நகர் உர்பான் பாப்பிறைப் பல்ககலைக்கழகத்தில் இறையியல் பயின்றபின், 1991ம் ஆண்டு குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
உரோம் நகரில் பயின்று, 2005ல் முனைவர் பட்டம் பெற்ற இவர், இதுநாள் வரை கட்டாக்-புபனேஸ்வர் உயர் மறைமாவட்டத்தில் கிறிஸ்தவ சபைகளிடையே பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதில் ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றி வந்துள்ளார். குரு நிரஞ்சன் சுவால் சிங்கை Sambalpur மறைமாவட்டத்தின் ஆயராக இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.