அகதிப் படகுகள் பற்றிய ஆஸ்திரேலிய கொள்கை குறித்து ஐநா கவலை
ஜூலை,26,2013. ஆஸ்திரேலியாவில் புகலிடம் தேடுவோர் தொடர்பான புதிய கொள்கை, தஞ்சம் கோருவோருக்கு
அளிக்கப்பட வேண்டிய போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுத்திருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. புதியக்
கொள்கையின்படி, ஆஸ்திரேலியா நோக்கி படகில் தஞ்சம்கோரி வருவோர் பாப்புவா நியுகினிக்கு
அனுப்பப்பட்டு, அங்கேயே அவர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, அகதிகளாக அங்கீகரிக்கப்படுவோர்,
அங்கேயே மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள். ஆனால், தஞ்சக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை
பரிசீலிக்கும் விடயத்தில் பாப்புவா நியுகினியின் சட்டதிட்டங்களில் பல்வேறு குறைபாடுகள்
காணப்படுவதாக UNHCR என்ற ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு கூறுகிறது. பாப்புவா நியுகினியில்
இருக்கின்ற அகதிகள் மற்றும் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள்
இல்லாதிருப்பது குறித்து UNHCR வருத்தம் அடைந்துள்ளதாகவும் கூறுகிறது. 2013 ஆண்டின்
ஜூலை 16ந்தேதி வரை 218 படகுகளில் 15,182 பேர் புகலிடம் தேடி ஆஸ்திரேலியா நோக்கி படகுகளில்
வந்துள்ளனர்.