ஜூலை,26,2013. மேலும், இந்தியாவின் Rourkela மறைமாவட்டத்தின் ஆயராக அருட்திரு Kishore
Kumar Kujurஐ இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். Sambalpur
மறைமாவட்ட குருவான இவர், 1964ம் ஆண்டு ஒரிசாவின் Gaibira எனுமிடத்தில் பிறந்து 1993ம்
ஆண்டு குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். Rourkela மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த
இறைவார்த்தை சபை ஆயர் John Barwa 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்டாக்-புபனேஸ்வர் உயர்மறைமாவட்ட
பேராயராக நியமிக்கப்பட்டதிலிருந்து Rourkela மறைமாவட்டம் ஆயரின்றி இருந்து வந்துள்ளது.