2013-07-26 16:07:23

Rourkela மறைமாவட்டத்துக்குப் புதிய ஆயர்


ஜூலை,26,2013. மேலும், இந்தியாவின் Rourkela மறைமாவட்டத்தின் ஆயராக அருட்திரு Kishore Kumar Kujurஐ இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Sambalpur மறைமாவட்ட குருவான இவர், 1964ம் ஆண்டு ஒரிசாவின் Gaibira எனுமிடத்தில் பிறந்து 1993ம் ஆண்டு குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
Rourkela மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த இறைவார்த்தை சபை ஆயர் John Barwa 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்டாக்-புபனேஸ்வர் உயர்மறைமாவட்ட பேராயராக நியமிக்கப்பட்டதிலிருந்து Rourkela மறைமாவட்டம் ஆயரின்றி இருந்து வந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.