2013-07-25 16:29:15

இஸ்பெயினில் இரயில் விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் செபம்


ஜூலை,25,2013. இஸ்பெயினின் வட மேற்குப் பகுதியில் இப்புதன் இரவு 8.42 மணிக்கு இடம்பெற்ற இரயில் விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் செபங்களையும் தெரிவிக்கும் தந்திச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லா பேராயர் Julian Barrio அவர்களுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், இவ்விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தனது ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டரிலும் இவ்விபத்து குறித்து தனது ஆழ்ந்த கவலையையும், செபங்களையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை. Madridலிருந்து Ferrolக்குச் சென்று கொண்டிருந்த அதிவேக இரயில், சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லா நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது தடம் புரண்டதில் ஏறக்குறைய 80 பேர் இறந்துள்ளனர். 140க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்பெயினில் கடந்த 70 ஆண்டுகளில் நடந்துள்ள கோர இரயில் விபத்து இது என்று சொல்லப்படுகிறது







All the contents on this site are copyrighted ©.