2013-07-24 15:33:12

தாய்லாந்து, மியான்மார் நாடுகளில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பயணம்


ஜூலை,24,2013. தாய்லாந்து, மியான்மார் ஆகிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் சவால்களில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதைத் தொடர விரும்புகிறோம் என்று இங்கிலாந்து ஆயர் Declan Lang கூறினார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பேரவையின் பிரதிநிதிகளும், Missio எனப்படும் பிறரன்புப் பணி அமைப்பின் பிரதிநிதிகளும் கடந்த இரு வாரங்களாய் Bangkok, Yangon, Myitkyina ஆகிய பகுதிகளில் பயணங்கள் மேற்கொண்டனர்.
Yangon பேராயர் Charles Bo அவர்களையும், Myitkyina ஆயர் Francis Daw Tang அவர்களையும் இப்பிரதிநிதிகள் சந்தித்து, அப்பகுதிகளில் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறித்து பேசினர்.
மியான்மார் நாட்டில் நேர்மறையான பல மாற்றங்கள் உருவாகிவருவது நிறைவைத் தந்தபோதிலும், கச்சின் பகுதி மக்களுக்கும் அரசுக்கும் இடையே நிகழும் மோதல்கள் வருத்தத்தைத் தருகின்றன என்று ஆயர் Lang எடுத்துரைத்தார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பேரவையும், Missio அமைப்பும் இப்பகுதிகளில் பல்வேறு சமுதாய முன்னேற்றப் பணிகளை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் - வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.