Manusதீவு, Lampedusaதீவைப் போல மாறும் ஆபத்து
உள்ளது - Papua New Guinea ஆயர்கள்
ஜூலை,24,2013. இத்தாலியின் Lampedusa தீவைப் போல, Papua New Guinea நாட்டில் Manus தீவு
மாறும் ஆபத்து உள்ளதென்று அந்நாட்டின் ஆயர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய
நாட்டை நோக்கி படகுகளில் செல்லும் புலம் பெயர்ந்தொரைத் தங்கவைக்க Papua New Guinea நாட்டின்
Manus தீவு ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியப் பிரதமரும், Papua New Guinea பிரதமரும்
இணைந்து, சென்ற வார இறுதியில் வெளியிட்ட ஓர் அறிக்கையை அடுத்து, ஆயர்கள் தங்கள் கவலையை
வெளியிட்டுள்ளனர். Papua New Guinea நாடு ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு
நாடு என்றும், Manus தீவுக்கு வரும் புலம்பெயர்ந்தொரைத் தங்கவைக்க, அங்கு போதிய வசதிகள்
இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், புலம் பெயர்ந்தோர் குறித்த பிரச்சனையிலிருந்து
ஆஸ்திரேலியா தப்பிக்க இந்த வழியைப் பின்பற்றுகிறது என்றும் கூறியுள்ளனர். அண்மையில்
Lampedusaவுக்குச் சென்றிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் 'உலகமயமாக்கப்பட்ட
அக்கறையின்மை' என்று கூறியதை Papua New Guinea ஆயர்கள் குறிப்பிட்டு, புலம் பெயர்ந்தோர்
பிரச்சனைக்கு, Manus தீவு ஒரு தீர்வு அல்ல என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆதாரம்
- Fides / AsiaNews