தேவ நிந்தனை குறுஞ்செய்தி அனுப்பியதாக பாகிஸ்தானில் கிறிஸ்தவ தம்பதி கைது
ஜூலை,23,2013. இஸ்லாம் மதத்திற்கு எதிரான தேவநிந்தனை குறுஞ்செய்திகளை கைப்பேசி மூலம்
அனுப்பினார் என கிறிஸ்தவர்கள் மீது குற்றம் சுமத்துவது பாகிஸ்தானில் அதிகரித்து வருவதாக
செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் Gojra பகுதியில் கடந்த வாரத்தில்
கிறிஸ்தவ இளைஞர் ஒருவருக்கு, தேவ நிந்தனை குறுஞ்செய்தி வழங்கினார் என தண்டனை வழங்கப்பட்டிருக்க,
கடந்த சனிக்கிழமையன்று அப்பகுதியின் இஸ்லாமிய குரு ஒருவருக்கு தேவ நிந்தனை வார்த்தைகள்
அடங்கிய குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக, கிறிஸ்தவ தம்பதியர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 43
வயதான Shafqat Masih என்பவரும், 40 வயதான அவர் மனைவி Shagufta என்பவரும் இஸ்லாமிய குரு
Rana Muhammad Ejaz என்பவருக்கு தேவ நிந்தனை குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதைத்
தொடர்ந்து, இத்தம்பதியர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இத்தம்பதியருக்கு 5க்கும் 11க்கும்
இடைப்பட்டவயதுகளில் 4 குழந்தைகள் உள்ளன.