2013-07-22 15:36:14

நுரையீரல் நோயால் இறக்கும் குழந்தைகள் 4.10 இலட்சம்


ஜூலை,22,2013. "இந்தியாவில் ஆண்டுதோறும் நுரையீரல் நோயால், நான்கு இலட்சத்து, 10 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர் என, ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு தரும் புள்ளிவிவரங்களை வெளியிட்ட தஞ்சை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன், இந்நோய் குறித்த போதிய விழிப்புணர்வின் அவசியத்தை வலியுறுத்தினார்.
குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள பெற்றோர்கள் முன்வந்தால், இறப்பை வெகுவாக தடுக்க முடியும்,'' எனவும் கூறினார் தஞ்சை ஆட்சியர் பாஸ்கரன்.

ஆதாரம் : தினமலர்








All the contents on this site are copyrighted ©.