2013-07-22 15:32:48

ஆப்ரிக்காவின் பெரும் ஏரிப் பகுதியில் அமைதி குறித்தகத்தோலிக்கஅமைப்பின் முயற்சிக்கு வெற்றி


ஜூலை,22,2013. ஆப்ரிக்காவில் பெரும் ஏரியை அடுத்துள்ள நாடுகளில் அமைதியை ஏற்படுத்த கத்தோலிக்க சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு தொடர்ந்து எடுத்த முயற்சியின்பேரில் புருண்டி நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
ஆப்ரிக்காவின் மத்தியப் பகுதியில் பயணம் மேற்கொண்டுவரும் சான் எஜிதியோ அமைப்பின் தலவர் Marco Impagliazzo, புருண்டி தலைநகரில் அண்மை நாடுகளின் பிரதிநிதிகளோடு நடத்தியக் கூட்டத்தில் இந்தஒப்பந்தம் கையெழுத்திடப்பட ஏற்பாடுச் செய்திருந்தார்.
1988ம் ஆண்டு முதல் ஆப்ரிக்காவின் பெரும் ஏரிப் பகுதியில் அமைதிக்காக உழைத்து வரும் சான் எஜிதியோ கத்தோலிக்க அமைப்பு, 2005ம் ஆண்டிலேயே அப்பகுதி நாடுகளிடையே அமைதி ஒப்பந்தம் உருவாக உதவியது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.