ஜூலை 20, 2013. கற்றனைத்தூறும்...... அடிப்படை முதலுதவிக் குறிப்புகள்
1. முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக்
கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும். 2. முதலுதவிப்
பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். 3.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக்
கவனத்தில் கொள்ளல் அவசியம். 4. அவசரச் சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத்
தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான
ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். 5. பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக
வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச
இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும், மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும்
மிக மிக முக்கியமானதாகும். 6. பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ
காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக் கட்டத்தைத்
தாண்டி விட்டால், சாய்த்துப் படுக்க வைத்து வெது வெதுப்பாக வைப்பதற்கு போர்வை அல்லது
கம்பளியால் போர்த்தி விட வேண்டும். 7. முதலுதவி அளிக்கும்போதே மருத்துவ உதவிக்கான
ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் 8. அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனதைரியத்தை
அளிக்க வேண்டும் 9. பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும்போது திரவப்பொருட்கள்
எதையும் கொடுக்கக்கூடாது. 10. பாதிக்கப்பட்ட நபருக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின்
குறிப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.