மியான்மாரில் அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள், அரசுத்தலைவர் செயின்
ஜூலை,16,2013. மியான்மாரிலுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் இவ்வாண்டு முடிவதற்குள் விடுதலை
செய்யப்படுவார்கள் என மியான்மார் அரசுத்தலைவர் தெயின் செயின் கூறினார். இத்திங்களன்று
பிரிட்டனுக்கான தனது முதல் அதிகாரப்பூர்வச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ள மியான்மார்
அரசுத்தலைவர் செயின் இலண்டனில் பிரதமர் டேவிட் காமரூனைச் சந்தித்த பின்னர் இத்தகவலை வெளியிட்டார். மியான்மாரில்,
2013ம் ஆண்டு முடிவதற்குள் மனச்சான்றின் கைதிகள் யாரும் இருக்கமாட்டார்கள் என்றும் இத்திங்களன்று
தெயின் செயின் கூறினார். 2010ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அரசுத்தலைவர் தெயின் செயின்
ஆட்சிக்கு வந்த பின்னர் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.