பாகிஸ்தான் கிறிஸ்தவர் ஒருவருக்கு தெய்வநிந்தனை சட்டத்தின்கீழ் ஆயுள் தண்டனை
ஜூலை,16,2013. கைபேசியில் தெய்வநிந்தனை செய்தியை அனுப்பினார் என்று குற்றம் சாட்டப்பட்டு
பாகிஸ்தான் கிறிஸ்தவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Seventh Day
Adventist கிறிஸ்தவ சபையைச் சார்ந்த Sajjad Gill என்பவர் தனது அண்டை வீட்டாரால் குற்றம்
சாட்டப்பட்டு, பாகிஸ்தானின் தெய்வநிந்தனை சட்டத்தின்கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இந்தத்
தெய்வநிந்தனை செய்தி, முறைப்படி பதிவு செய்யப்படாத கைபேசியிலிருந்து வந்திருப்பதாகவும்,
Gillன் கைபேசியை சோதித்த காவல்துறையினர் அச்செய்தி அவரது கைபேசியிலிருந்து அனுப்பப்படவில்லை
என அறிந்ததாகவும் கூறும் ஊடகங்கள், இருந்தபோதிலும் நீதிமன்றம் Gillஐ குற்றவாளி எனக் கூறியிருப்பதாகத்
தெரிவித்துள்ளன. மேலும், இந்தியாவின் ஒரிசாவில், பிரிந்த கிறிஸ்தவ சபை பாதிரியார்
ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்க, அதனை விபத்து என்று சொல்லி அவ்வழக்கைக் காவல்துறை திசைதிருப்ப
முயற்சிப்பதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.