2013-07-16 15:21:58

ஜக்தல்பூர் சீரோ-மலபார் வழிபாட்டுமுறை மறைமாவட்டத்துக்குப் புதிய ஆயர்


ஜூலை,16,2013. இந்தியாவின் ஜக்தல்பூர் சீரோ-மலபார் வழிபாட்டுமுறை மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி ஜோசப் கொல்லம்பரம்பில் (Joseph Kollamparampil) அவர்களை இச்செவ்வாயன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜக்தல்பூர் சீரோ-மலபார் வழிபாட்டுமுறை மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் சைமன் ஸ்டாக் பாலத்தாரா (Simon Stock Palathara) அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், அம்மறைமாவட்டத்துக்குப் புதிய ஆயரை நியமனம் செய்துள்ளார்.
கேரளாவில் 1958ம் ஆண்டு பிறந்த புதிய ஆயர் ஜோசப் கொல்லம்பரம்பில், C.M.I.என்ற கார்மேல் அமலமரி சபையில் சேர்ந்து 1985ம் ஆண்டு குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
உரோம் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் மறைப்பணியியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், தற்போது போபால் Samanvaya இறையியல் கல்லூரியின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.